பொதுமக்கள் கவனத்திற்கு.. ரேஷன் பொருட்கள் முடங்கும் அபாயம்.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
தமிழ்நாட்டில் தற்போது 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் 2 கோடிக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகளில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பணியாளர்களும் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
B.E./B. Tech தேர்ச்சி பெற்றவரா? ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
இந்நிலையில் “ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது, ஊழியர்களின் கல்வித் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி இன்று (22-04-2025) முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்”. இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு செய்யப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் ரேஷன் பொருட்களுக்கான விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
























