தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – வந்துள்ள புதிய முறை! அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர் இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வாங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் சோதனை முறையில் உள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் தகுதியுடைய நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பயனர்கள் மாதந்தோறும் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். பொதுவாகவே ரேஷன் கார்டுதாரர்கள் கடையில் உள்ள பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகையை பதிவு செய்த பிறகு பொருட்கள் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த கைரேகை பதிவு செய்யும் முறையில் பல குளறுபடிகள் மற்றும் இயந்திர கோளாறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களும், பொதுமக்களும் அரசிடம் புகார் தெரிவித்து வந்தனர். இதனைடுத்து பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கண் கருவிழி பதிவு செய்து பொருட்கள் விநியோகிக்கும் முறை கொண்டு வரப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
Post Office-ன் சூப்பர் திட்டம் – இரட்டிப்பாகும் பணம்! முதலீட்டிற்கான சிறந்த வழி!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி சோதனை முறையில் கண் கருவிழி பதிவு முறையை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு மக்கள் தரும் வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் கண் கருவிழி பதிவு முறை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.