Post Office-ன் சூப்பர் திட்டம் – இரட்டிப்பாகும் பணம்! முதலீட்டிற்கான சிறந்த வழி!
அஞ்சலகத்தில் நடைமுறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தற்போது அதிக வருமானம் தரக்கூடிய சிறந்த முதலீடு திட்டம் மற்றும் அதன் முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
நிலையான வைப்புத்தொகை:
இந்திய மக்கள் தற்போது சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் துறை பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அஞ்சலக திட்டத்தில் மக்கள் முதலீடு செய்வதன் நோக்கம் அதிக வட்டித்தொகை மற்றும் பண பாதுகாப்பு ஆகும். அண்மையில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது.
Exams Daily Mobile App Download
இதனால் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது. குறிப்பாக மக்களுக்கு சிறந்த தேர்வான FD திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது அஞ்சலகத்தில் 5 ஆண்டு FDக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி நீங்கள் 8 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 6.7 சதவீதத்தின் படி வட்டி மட்டும் உங்களுக்கு ரூ.3,15,254 கிடைக்கும். இந்த திட்டத்தில் உங்களின் தேவைக்கேற்ப முதலீடு காலத்தை நீங்கள் நீட்டித்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆதார் கார்டில் உங்களின் புகைப்படத்தை ஈசியாக மாற்றலாம்.. சுலபமான வழிமுறைகள் இதோ!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் நீங்கள் FD திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் ரூ.8 லட்சமானது ரூ.21,67,409 ஆக அதிகரிக்கும். அதாவது உங்களது முதலீடானது இரட்டிப்பாகும்.இந்த நிலையான வைப்புத்தொக (FD) திட்டத்தை பொறுத்தவரை வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வருடத்தை பொருத்தும் வட்டி மாறும்.