ரேஷன் கடை மூலம் பண்டிகை கால சலுகைகள் – மாநில அரசுகளின் சூப்பர் அப்டேட்!
இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மாநில அரசுகள் கொடுத்த அப்டேட் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ரேஷன் கடைகள்:
நாடு முழுவதும் இன்னும் சில மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் வர இருக்கிறது. பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் வகையில் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக சில சலுகைகளை வழங்கி வருகிறது. அது குறித்து முழு விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
கேரளா
கேரளா அரசு அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் ஓணம் கிட் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு நிதிநிலைமை மோசமாக இருப்பதால் இந்த கார்டுதாரர்களுக்கு மட்டும் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு ரூ.100க்கு ரேஷன் கிட் வழங்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. மேலும் ஆனந்த் ஷிகா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவங்கப்பட்டை மற்றும் எண்ணெயுடன் 1 கிலோ ரவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாநில மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் சுமார் 20,000 வீடற்ற மக்களுக்கு ரேஷன் கிட்கள் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் அதில் உப்பு, முந்திரி, சமையல் எண்ணெய், டீ தூள், சாம்பார் பொடி, மிளகாய் தூள், பச்சைப்பயறு, மல்லி தூள், மஞ்சள் தூள், துவரம் பருப்பு, நெய் மற்றும் சேமியா ஆகியவை இருக்கும்.