ரேஷன் அரிசியை விற்றால் கார்டு ரத்து – ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

0
ரேஷன் அரிசியை விற்றால் கார்டு ரத்து - ஆலோசனை கூட்டத்தில் முடிவு!
ரேஷன் அரிசியை விற்றால் கார்டு ரத்து - ஆலோசனை கூட்டத்தில் முடிவு!
ரேஷன் அரிசியை விற்றால் கார்டு ரத்து – ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

ரேஷன் அரிசி:

தமிழக ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனை இடைத்தரகர்கள் கள்ள சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்று புகார்கள் வந்துள்ளது.

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளும் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அரிசியை கடத்தி கொண்டு செல்லும் வாகனங்கள் அதனை விற்பனை செய்வோர் குறித்த விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு அரிசியை கடத்துபவர்களை கண்டறிந்து அவர்களின் ரேஷன் கார்டுகளை பறிமுதல் செய்து அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!