அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ரேஷன் கார்டை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்து கொள்வது அவசியம். குறிப்பாக புதிய உறுப்பினர்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடர் காலத்தில் திமுக தலைமையிலான அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் பயன் பெற்றனர். அதனை தொடர்ந்து வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.
TNUSRB தமிழக காவல்துறையில் 444 உதவி ஆய்வாளர் (SI) காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 7 கடைசி நாள்!
இதன் மூலம் வெளிமாநில ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலேயே பொருட்களை பெற்று வந்தனர். ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை போன்றே தற்போது ரேஷன் கார்டும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆவணத்தை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும். தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது முதல் அதில் விவரங்களை மாற்றுவது முதல் அனைத்து வேலைகளையும் ஆன்லைன் மூலமாகவே செய்யலாம்.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31 கடைசி நாள்!
இந்த முறையில் புதிதாக குடும்ப உறுப்பினரை சேர்க்க முதலில் நீங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். இதை ஆவணமாக வைத்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம். https://tnpds.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் பிற விவரங்களையும் மாற்றிக்கொள்ளலாம். குழந்தையின் பெயரை ஆதாரில் இணைக்க ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் அவசியமாகும்.