குழந்தைக்காக தனது கனவை கைவிடும் சந்தியா.. தோழி சொன்ன அந்த விஷயம் – அதிரடி திருப்பங்களுடன் “ராஜா ராணி 2” ப்ரோமோ!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், ஐபிஎஸ் ட்ரைனிங்கில் இருக்கும் சந்தியா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், ட்ரைனிங்கை தொடர முடியாமல் அவர் வீட்டிற்கு கிளம்புகிறார். அப்போது சந்தியாவின் தோழி வந்து முக்கியமான விஷயம் ஒன்றை சொல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராஜா ராணி 2 ப்ரோமோ:
ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா தன்னுடைய அப்பா அம்மாவின் கனவை நினைவேற்ற ஐபிஎஸ் ட்ரைனிங்கில் இருக்கிறார். பல போராட்டங்களுக்கு பின் அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். மேலும் சரவணனும் சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என ஆசையில் இருக்கிறார். ஊர் முழுவதும் சிவகாமி மருமகள் போலீஸ் ஆக இருக்கிறார் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த நேரத்தில் சந்தியாவின் லட்சியத்தில் இடி விழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது ட்ரைனிங் நடைபெறும் போது சந்தியா அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறார். அதனால் சந்தியா கர்ப்பமாக இருப்பாரோ என்ற சந்தேகம் சரவணனிற்கு வருகிறது. அதனால் அவர் சந்தியாவை டெஸ்ட் செய்து பார்க்க சொல்கிறார். சந்தியாவும் டெஸ்ட் செய்து பார்க்க அதில் பாஸிட்டிவ் என வருகிறது. இது பற்றி சந்தியா சரவணனிடம் சொல்ல, சந்தியாவின் கனவிற்கு அவரே தடையாக இருந்ததை நினைத்து வருத்தப்படுகிறார். பின் போலீஸ் அதிகாரி இந்த நிலைமையில் நீ ட்ரைனிங்கில் கலந்து கொள்ள முடியாது என சொல்கிறார்.
விஜய் டிவி ” தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் வர போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் சரவணன் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக சிவகாமியிடம் சொல்ல, அவர் மிகவும் சந்தோசப்படுகிறார். அவர் சந்தியாவை பார்க்க வர அழகான குழந்தையை நீ பெற்று எடுக்க போகிறாய் இதை விட வாழ்க்கையில் என்ன வேண்டும் என கேட்க, உடனே சந்தியா குழந்தைக்காக தன்னுடைய முடிவை கைவிட இருக்கிறார். சந்தியா காரில் எற செல்ல, அப்போது சந்தியாவின் தோழி வந்து முக்கியமான விஷயம் பற்றி சொல்கிறார். அது என்ன என கேட்டு தற்போது வெளியான ப்ரோமோவில் ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. சந்தியா தனது கனவை அடைவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.