விஜய் டிவி ” தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலில் வர போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில், தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அடுத்து வர இருக்கும் எபிசோட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சீரியல் ட்விஸ்ட்:
தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மக்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஆக்சன் காட்சிகளும், வெற்றி அபியின் காதல் காட்சிகளும், பல திருப்பங்களும் தான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது. பல கஷ்டங்களுக்கு பின் தற்போது வெற்றி அபி சேர்ந்து இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் அபி மயக்கம் போட்டு விழுவது போல காட்டப்பட்டது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் அபி மாசமாக இருப்பது போல கதை கொண்டு செல்லப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய எபிசோடில் அது போல எதுவும் காட்டப்படவில்லை. அபி சாப்பிடாமல் இருந்ததால் தான் மயக்கம் போட்டது போல காட்டப்பட்டதால், ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.
பொறுமையை இழந்த ஹவுஸ்மேட்ஸ்.. அசிமை மன்னிப்பு கேட்க சொல்லும் விக்ரமன் – வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடில் கிராமத்து சூழ்நிலையில் கதை செல்ல இருக்கிறது. அதாவது அபியின் சொந்த ஊரில் விளக்கு திருவிழா நடைபெற இருக்கிறது. அதற்கு அபியும் வெற்றியும் கண்டிப்பாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட இருக்கிறது. அதனால் இனி இந்த சீரியலில் கிராமத்து சூழ்நிலையில் காட்சிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த எபிசோடுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.