
மீண்டும் ரஷ்யா- உக்ரைன் இன்று பேச்சுவார்த்தை.. சந்திப்பை புறக்கணித்த புதின்.. வெளியான முக்கிய தகவல்..!!
உக்ரைன் – ரஷ்யா இடையான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி மேற்கொண்டும் எதுவும் பலனளிக்கவில்லை. இந்நிலையில் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் “ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கியில் இன்று (15-05-2025) நேரடி பேச்சுவார்த்தை நடத்தலாம் என உக்ரைனுக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிலையில் துருக்கியில் உள்ள அங்காராவில் நடக்கவிருந்த நேரடி பேச்சுவார்த்தையை புதின் புறக்கணிக்க உள்ளதாகவும், அதற்கு பதிலாக அவரது பிரதிநிதிகளை நேரடி பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக, ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளது”.

























