
உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்.. அதிபர் புதினுடன், டிரம்ப் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தை வெற்றி..
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான நீண்டகால மோதலைக் நிறுத்த அமெரிக்கா அரசு சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாட்டு அதிபர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த போர் நிறுத்தம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, இடைக்கால போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் தொலைபேசியில் கடந்த செவ்வாய்க்கிழமை (18-03-2025) அன்று பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நிகழ்ந்த இந்த உரையாடலில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான நீண்டகால மோதலைக் குறைக்கும் நோக்கில் இரு நாட்டினரின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பை தக்கக்கூடாது என்று முன்னிலை படுத்தி வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு புதின் ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் இருதரப்பு தேவைகளையும் கவனத்தில் கொண்டு இரு நாட்டு அதிபர்களுடன் பேசியதாக தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

























