9,10,11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்துவதில் குழப்பம் – மாணவர்கள் & பெற்றோர்கள் கோரிக்கை!!
புதுச்சேரி 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வுகள்:
கொரோனா காரணமாக தமிழகத்தில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புதுச்சேரி மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்தார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதற்கு காரணம், புதுச்சேரியில் தனியாக கல்வி மாவட்டம் இல்லை. அதாவது யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் என நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அவற்றில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி வாரிய முறையை பின்பற்றியே பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. தேர்வுகள் மற்றும் பாடத்திட்டங்கள் போன்றவை அதன்படியே இருக்கும்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – மாற்றி அமைக்க கோரிக்கை!!
தமிழக கல்வி வாரியம் மூலமாக பொதுத்தேர்வுகள், மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிவுகள் போன்றவை பெறப்படுகின்றன. இதனால் தமிழகத்திற்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரியில் எப்படி தனியாக தேர்வு நடத்த முடியும் என மாணவர்கள், பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து துணைநிலை ஆளுநர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் வெளிப்படையாக விளக்கம் அளித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் மே 3 முதல் திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
இந்நிலையில் இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், “புதுச்சேரியில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்துப் பெற்றோர்கள், கல்வி நிபுணர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்