தமிழகத்தில் மே 3 முதல் திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகம் முழுவதும் மே 3ம் தேதி திட்டமிட்டபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்த நாளே தேர்வு தொடங்குவதால் அதனை மாற்றக்கோரி வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி முதல் செயல்பட தொடங்கி உள்ளது. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. மேலும் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று, மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாளே (மே 3) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. இதனால் தேதியை மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 8 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கு பெரிய அளவில் இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சினை இல்லை என கூறப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்