மார்ச் 8 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மார்ச் 8ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடக்க இருப்பதால் அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்டுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவில் திருவிழா:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும். இதற்காக பல ஊர்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்களும், உள்ளூர் மக்களும் திருவிழாவிற்கு கூடுவார்கள்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு – தனியார் பள்ளிகள் திட்டம்
உள்ளூர் விடுமுறை:
வரும் மார்ச் 8ம் தேதி அன்று திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். இதனால் மார்ச் 8ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்த்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாகும். பொது விடுமுறை நாளன்று மாவட்ட கருவூல அலுவலகங்கள் அலுவலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களுடன் நடைபெறும்.
பணி நாள்:
மார்ச் 8ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படுவதால் அதற்கு மாற்றாக வரும் மார்ச் 27ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பணி நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமாக சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் அலுவலகங்களுக்கு மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8ம் தேதி அரசு அறிவித்துள்ள பொதுத்தேர்வு அல்லது தேர்வு பணிகள் இருப்பின் அவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்