மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!

0
மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!
மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!

மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தற்போது பஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு (மே 17 வரை) ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் உயிரிழப்புகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மே 3க்கு பிறகு நாடு முழுவதும் நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை. தற்போது பஞ்சாப்பில் மே 3ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கின் போது தினமும் காலை 7 மணிமுதல் 11 மணிவரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் அப்போது மக்கள் வெளியே வருவதில் எந்த தடையும் இல்லை எனவும் முதல்வர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!