புதுச்சேரியில் மீன் பிடிக்கும்போது இறக்கும் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி – சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்!
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்
நிதியுதவி
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. அதன் பின் பட்ஜெட் கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு சார்பில் மக்களுக்கான பல அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த அறிவிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
முன்னதாக புதுச்சேரியில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்தால் அவர்களுக்கு வழக்கமாக நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. அதனை, தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உயர்த்தப்பட்டு என்று தெரிவித்துள்ளது. இதனால் இனி கடலில் மீன் பிடிக்கும் போது உயிரிழக்கும் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் ஆக நிதியுதவி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates