அரசு பள்ளி ஆசிரியர்கள் மார்ச் 31 வரை பள்ளிக்கு வருவது கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஆசிரியர்களுக்கான அறிவிப்பு:
புதுச்சேரியில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருவதன் எதிரொலியாக பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக பள்ளிகள் பகுதி நேரமாக நடைபெற்றன.
TN Job “FB Group” Join Now
அதன்பின்னர் முழு நேரமாக செயல்படலாம் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
TNPSC தமிழ்வழி 20 சதவீத இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!!
இந்நிலையில் இந்த உத்தரவை அடுத்து புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் செயல்பட வில்லை. ஆனால் சில பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் வந்தது. அதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல்பாஸ் – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!
அதில்,” கொரோனா காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக உரிய கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெறும். ஆசிரியர்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் – ஆறு மாநிலங்களில் 81% பதிவு!!
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் தொடர்பான உரிய ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மாற்று சான்றிதழ் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Teachers pavam ellaiya 😓