நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் – ஆறு மாநிலங்களில் 81% பதிவு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் 81 சதவிகிதத்திற்கு அதிகமாக பதிவாகி வருகிறது.
கொரோனா பரவல் அதிகரிப்பு:
2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தாக்கம் நாடு முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா படிப்படியாக குறைந்து வந்தது. மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நேரத்தில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட கொரோனா தாக்கம் பரவ தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 40,715 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு மாநிலங்களில் மட்டும் 80.90% சதவிகிதம் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி:
மகாராஷ்டிரா – 24,645 பேருக்கும்
பஞ்சாப் – 2299 பேருக்கும்
குஜராத் – 1640 பேருக்கும்
தமிழகலத்தில் – 1385 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரம் – பள்ளிகளுக்கு உத்தரவு!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 7,84,612 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.