LPG சிலிண்டர் மானியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – எவ்வளவு பணம் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு வழங்கப்படும் LPG சிலிண்டர் மானியம், வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
சிலிண்டர் மானியம்
மத்திய அரசின் முயற்சியால் நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களில் இப்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர் உபயோகத்தில் இருந்து வருகிறது. அதாவது, நாடு முழுவதும் உள்ள ஏழை மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு மத்திய அரசாங்கம் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாக இணைக்கும் சேவையை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கு அரசு ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை மானியமாகவும் வழங்கி வருகிறது.
சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இப்படி இருக்க, சமீபத்தில் நாட்டில் நிலவும் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்தது. இதனுடன் சேர்த்து உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.200 கூடுதல் மானியமாக வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால் நீங்கள் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளியாக இருந்தால், இந்த மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் அனுப்பப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இதற்கான எளிய வழிமுறைகளை பொருத்தளவு:
- பயனர்கள் முதலில் www.mylpg.in என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
- இந்த இணைப்பை திறந்தவுடன் அதன் வலது பக்கத்தில் கேஸ் சிலிண்டரின் புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும்.
- அதை கிளிக் செய்யவும்.
- தொடர்ந்து சேவை வழங்குநர் நிறுவனம் என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும்.
- அதை கிளிக் செய்தால் சைன் இன் மற்றும் நியூ யூசர் என்ற ஆப்ஷன் தோன்றும்.
- இதில் ஐடி பராமரிக்கப்பட்டால், சைன் இன் என்பதைக் கிளிக் செய்யவும்.
Exams Daily Mobile App Download
- இல்லை என்றால் புதிய பயனர் என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு, சிலிண்டர் முன்பதிவு ஹிஸ்ட்ரியை கிளிக் செய்யவும்.
- இப்போது எந்தெந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் கிடைத்துள்ளது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
- இதில், மானியம் கிடைக்கவில்லை என்றால் பீட்பேக் விருப்பத்தை தேர்வு செய்து அதற்கு புகார் அளிக்கலாம்.
- மேலும் 18002333555 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
குறிப்பு:
- இப்போது மத்திய அரசின் இந்த மானிய அறிவிப்பு உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
- இதன் கீழ் ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்களுக்கு மட்டும் ரூ.200 ரூபாய் மானியம் கிடைக்கும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்