சென்னையில் இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் நிலவிய கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவு, தொழில் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக தங்க விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் நகைகள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு வகையான முதலீடு மட்டுமே இந்தியாவில் தங்கம் என்பது ஒரு வித கலாச்சாரமாக உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த பிறகு தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை விலை குறைந்தபாடில்லை.
தமிழக அரசில் பகுதி நேர வேலை – உடனே விரையுங்கள்..!
எப்போதும் பண்டிகை, திருவிழா மற்றும் சுப முகூர்த்த தினங்களில் நகைகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவர். ஆனால் அந்த நாட்களில் தான் தங்கம் விலை அதிகரிக்கிறது. இந்த நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் 36,000க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் 40,000 ஐ எட்டியது. தங்கம் விலையானது பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து ஒரு நாளைக்கு 2 முறை அதாவது காலை மற்றும் மாலையில் விலை மாற்றம் அடைகிறது. அதன்படி இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் ஒரு சவரன் ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து, ரூ.4780-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் வெள்ளி ஒரு கிராமுக்கு கிராம் 10 பைசா உயர்ந்து ரூ.67.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.100 உயர்ந்து ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை அதிகரித்து தான் காணப்பட்டது. அதனால் நகைப்பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.