இளைஞர்களே தயாரா இருங்க.. ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 150 நிறுவனங்கள் பங்கேற்பு!

0
இளைஞர்களே தயாரா இருங்க.. ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 150 நிறுவனங்கள் பங்கேற்பு!
இளைஞர்களே தயாரா இருங்க.. ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 150 நிறுவனங்கள் பங்கேற்பு!
இளைஞர்களே தயாரா இருங்க.. ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 150 நிறுவனங்கள் பங்கேற்பு!

கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் வாயிலாக சுமார் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழக இளைஞர்கள் தங்களது கல்வி தகுதிக்குரிய வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆக. 26ம் தேதி கரூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வேலை வாய்ப்பு முகாமானது கரூர் தான் தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8, 10,12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ பொறியியல், தையல் பயிற்சி, நர்சிங் உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடையவர்கள் பங்கேற்கலாம். சுமார் 150க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 10,000 மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவின் இரு வெற்றிகள்.. இன்று (ஆக.23) வரலாற்றில் முக்கிய நாள்- ஒரு அலசல்!

அதனால் தற்போது வேலை வாய்ப்பை தேடி வருபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் முகாமில் பங்கேற்க வரும் நபர்கள் சுயவிவரக்குறிப்பு, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அத்துடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!