தமிழக அரசுக்கு ரூ.10000 அபராதம் – ஓய்வூதியம் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு!
ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் சரியான நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் தமிழக அரசுக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.10000 அபராதம்:
தமிழகத்தில் உசிலம்பட்டியை சார்ந்த அரசு ஊழியர் ஒருவர் குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 50 சதவீத தொகையை திரும்ப தர வேண்டும் என உயர்நீதிமன்ற கிளையில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால், அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கிற்கு ஏழரை ஆண்டுகளாகியும் உயர்நீதிமன்ற கிளையின் சார்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை.
Join Our WhatsApp Group” for Latest Updates
இந்நிலையில், பதில் மனுவை அனுப்பக்கோரி தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், ஒவ்வொரு குடிமகனுக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைக்க செய்வது அரசின் கடமை என அறிவிக்கப்பட்டது.
இளைஞர்களே தயாரா இருங்க.. ஆக. 26 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 150 நிறுவனங்கள் பங்கேற்பு!
மேலும், பதில் மனு தொடர்பான விதிமுறைகளை தமிழக அரசு பின்பற்றுமாறு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியருக்கு ஏழரை ஆண்டுகளாக பதில் மனு அனுப்பாத நிலையில் தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அபராதத் தொகையை மதுரையில் அமைந்துள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.