தமிழகத்தில் மே 11ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11ம் தேதி அன்று நடக்க உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக, விஐடி பல்கலைக்கழகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மே 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10, 12ம் வகுப்பு கல்வித்தகுதி முதல், பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல், பார்மசி, செவிலியர் போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி கொண்டவடர்களும் கலந்து கொள்ளலாம்.
ICICI வங்கியில் வேலை தேடுபவரா? புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || தேர்வு கிடையாது!
150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதால், உங்கள் தகுதிக்கேற்ப வேலை கட்டாயம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. காலை 8:30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று முனாப்த்தி செய்து கொள்ள வேண்டும். இதனை பற்றிய மேலும் கூடுதல் தகவல்களை 0416-2290042, 9499055896, 8610977602, 8778078130, 81487 27787, 9095559590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.