தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடி உயர்வு - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடி உயர்வு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகத்தில் காய்கறி விலையை தொடர்ந்து பருப்பு விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

விலை ஏற்றம்:

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் காய்கறிகளில் தக்காளி விலை புதிய உச்சம் தொட்டு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலையை தொடர்ந்து மளிகை பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு விலை அதிகரித்திருபதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

அதன் படி துவரம் பருப்பு 100 கிலோ புதுஸ் லயன் விலையானது கடந்த வாரம் ரூ.15,200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் திடீரென மூட்டை ரூ.300 உயர்ந்து ரூ. 15,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம் மூடை ஒன்றுக்கு ரூ. 12500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலையானது திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ. 13,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஷாக் அறிவிப்பு – 3% மட்டுமே DA உயர்வு!

பாசி பருப்பு கடந்த வாரம் ரூ. 10400க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளது. பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ. 6,200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ. 6,300க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கடலை புண்ணாக்கு கிலோ ரூ. 5800க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.200 உயர்ந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.6,000க்கு விற்பனையாகி வருகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!