இந்தியாவிற்காக வீர, தீர சேவையாற்றிய 1,132 வீரர்களுக்கு குடியரசு தின விழாவில் ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி விருது:
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் அந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகளும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், குடியரசு தின விழாவில் இந்தியாவில் வீர தீர செயல்களில் ஈடுபட்ட காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட படைகளை சேர்ந்த 1132 வீரர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட இருக்கிறது.
இதில் சிறந்த சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த மூன்று போலீசார் ஜனாதிபதி பதக்கத்தை பெறவுள்ளனர். அதேபோல, குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 26 போலீசாரின் பணியை பாராட்டி மத்திய அரசின் விருதுகளும் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, 2022, 2023ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விருதுகளும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் எனவும், இலக்கியமாமணி விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் காசோலை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.