
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவிப் பிரமாணம்.. குடியரசுத் தலைவர் தலைமையில் பொறுப்பேற்றார்..!!
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான சஞ்சீவ் கண்ணா 11 நவம்பர் 2024 அன்று 51 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் மே மாதம் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதை முன்னிட்டு புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த 16 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம் செய்வது குறித்து பரிந்துரை செய்திருந்தார்.
அதற்கு ஏப்ரல் 29 ஆம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கிய நிலையில் பூஷண் ராமகிருஷ்ணா கவாய் வரும் மே மாதம் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று கொள்வார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி “உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்சீவ் கன்னா நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, இன்று (14-05-2025) ராஷ்டிரபதி பவனில் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்”.

























