தமிழகத்தில் நாளை (டிச.8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை (டிச.8) சென்னை கிண்டி பகுதியில் ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் தடை ஏற்படுகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகளை முறையாக கொள்வதன் மூலம் பல்வேறு மின் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏற்படும் மின் கோளாறு மற்றும் மின் கசிவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. அத்துடன் தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது.
Wipro நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்ப விவரங்கள் இதோ!
இதனால் அநேக இடங்களில் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை அரசு கண்காணித்து மாதந்தோறும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தான் மின் தடை ஒவ்வொரு பகுதிகளிலும் அறிவிக்கப்படுகிறது. இதனை அரசு முறையாக அறிவித்து அதன் பின் மின் தடை செயல்ப்படுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை சென்னை கிண்டி பகுதியில் ஒரு நாள் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
ATM மைய பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு – அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமல்!
அதாவது புதன்கிழமை (டிச.8) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஆலந்தூர் எம்.கே.என் ரோடு, ஆலந்தூர் மெயின் ரோடு, ரயில் நிலையம் ரோடு, ஜி.எஸ்.டி, ரோடு, மதுரை தெரு, வேளச்சேரி ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, குப்புசாமி காலனி, ஆதம்பாக்கம் அலுவலர் காலனி, ஏரிக்கரை மற்றும் ஆதம்பாக்கம் பகுதி, என்.ஜி.ஓ. காலனி, எஸ்.பி.ஐ. காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் ஏற்படும் என்றும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.