அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.81,000 சம்பளம்!!

0
அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.81,000 சம்பளம்!!
அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.81,000 சம்பளம்!!
அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.81,000 சம்பளம்!!

இந்திய அஞ்சல் துறையில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி முதல் பட்டப் படிப்பு வரை கல்வித்தகுதி கொண்ட பல்வேறு பணிகளுக்குமான 55,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தபால் துறை:

இந்திய அஞ்சல் துறை ஆனது நாட்டின் மிகப்பெரும் துறையாக அனைத்து பகுதிகளிலும் மூலை முடுக்குகளில் உள்ள மக்களுக்கும் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனால் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இத்துறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் துறை ஊழியர்கள் நியமனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில் போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்ட்மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாப் என்று மொத்தம் ஐந்து பிரிவுகளில் 55 ஆயிரம் காலி பணியிடங்கள் வரை நியமனம் செய்யப்பட உள்ளது.

ரூ.2,000 உங்கள் கணக்கில் வரவில்லையா? – என்ன செய்ய வேண்டும்!

இப்பணிகளுக்கு ரூபாய் 25500 முதல் ரூபாய் 81 ஆயிரத்து 100 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். போஸ்டல் அசிஸ்டன்ட், சார்ட்டிங் அசிஸ்டன்ட் போன்ற பணிகளுக்கு டிகிரி கல்வி தகுதியாகவும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு கல்வி தகுதி ஆகவும், மல்டி டாக்கிங் ஸ்டாப் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!