
உங்களின் முதலீட்டிற்கு சிறப்பு சலுகை வழங்கும் தபால் துறை.. விண்ணப்பிக்க கடைசி நாள்.. எப்போன்னு தெரியுமா..??
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும், தாங்கள் சேமித்த பணத்தை முதலீடு செய்ய போஸ்ட் ஆஃபீஸ்யே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறைந்த அளவிலான வட்டி விகிதம் கிடைத்தாலும், முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அரசு முழு பாதுகாப்பு வழங்குவதால், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முதலீடு தேர்வுகளில் தபால் அலுவலக திட்டங்கள் முதன்மையாக உள்ளன. இந்நிலையில் மகளிருக்கு உதவும் வகையில் அரசால் அறிமுகம் செய்யப்பட்ட தபால் அலுவலக திட்டம் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, வாடிக்கையாளர்களுக்கு பலன்களை அளிக்கும் விதமாக, தபால் துறை, பல்வேறு பயனுள்ள திட்டங்களை உருவாக்கி அதை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த 2023 ஏப்ரல் 1-ஆம் தேதி பொருளாதார ரீதியாக பெண்களுக்கு அதிக பலன் அளிக்க “மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்” என்ற திட்டத்தை போஸ்ட் ஆஃபீஸ் மூலமாக மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் “மாதம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படும் முதலீட்டிற்கு 7.5 % நிலையான வட்டி, காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிட்டு வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “மகளிர் சம்மான் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து 40% வரை பணத்தை எடுத்துக் கொள்ளும் சிறப்பு வசதியை தபால் துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31 ஆம் தேதிக்குள் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே என்று தபால் துறை அறிவித்துள்ளது”.

























