
குடும்ப அட்டைதாரர்களே…!! 5 நாளுக்குள்ள இத செய்யலைன்னா உங்க கார்டு ரத்து…!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!
மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் பெரும் சதவீத மக்களால் பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டில் புதிய விதி ஒன்றை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது அது தொடர்பான செய்தி ஒன்றை கீழே விரிவாக காண்போம்.
அதாவது, நாட்டில் 80 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த ரேஷன் கார்டில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனை சரி செய்வதற்காகவே, மத்திய அரசு சமீபத்தில் ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பாலானோர் அதனை செய்யாத நிலையில் தற்போது ஒரு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது, நாட்டில் ரேஷன் அட்டை பயன்படுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், இருவேளை உணவுக்காக அரசாங்கத்தையே எதிர்பார்த்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுக்கின்றனர். எனவே, மக்களுக்கு முறையாக அவர்களுக்கான சலுகைகளை வழங்கவே அரசு இவ்வாறான செயல்முறைகளுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த செயல்முறைகளை முடிக்க அரசு மார்ச் 31 ஆம் வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. ஒருவேளை, இந்த கால அவகாசத்துக்குள் ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைத்தல், கைரேகையை பதிவேற்றல், கே.ஒய்.சி சரிப்பார்த்தல் போன்ற செயல்களை செய்யவில்லை எனில், ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும், மார்ச் 31 ஆம் தேதிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் இந்த செயல்களை விரைந்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது.


























