
இனி வெளிநாட்டினருக்கு விசா எளிதாக கிடையாது.. அமெரிக்க குடியுரிமையில் ஏற்பட்ட புதிய மாற்றம்.. நிர்வாக விதிகளை கடுமையாக்க டிரம்ப் உத்தரவு..
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாள் முதல் அமெரிக்காவின் குடியுரிமை, வரி விதிப்பு போன்றவற்றில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கும் விதிமுறைகளை கடுமையாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் . மேலும், அமெரிக்கா குடியுரிமை இல்லாதவர்கள் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க இந்த திடீர் நடவடிக்கை ஆனது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் குடியுரிமை தொடர்பாக மற்றொரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஹமாஸ் எதிர்ப்பு போராட்டம்.. கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள்.. அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவம்..
அதாவது, “இனி அமெரிக்காவில் விசா கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறையில் பகிர வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசியல் மற்றும் கொள்கையை ஆன்லைனில் விமர்சிக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது”. மேலும், இந்த நிபந்தனை கிரீன் கார்டுடன் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களையும் உள்ளடக்கிய வண்ணம் விரிவு படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.























