8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் Post Office இல் மாத வருமானம் பெறும் வழி – முழு விபரங்கள் இதோ!
தபால் நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பான முதலீடு திட்டங்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி கிடைப்பதால், மக்கள் அதிகளவில் டெபாசிட் செய்கின்றனர். அதிக இடங்களில் தபால் நிலையங்கள் இல்லாதலால் பிரான்சைஸ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
பிரான்சைஸ் திட்டம்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் இழப்புகளை மக்கள் சந்தித்து வந்தன. இதனால் மக்கள் தற்போது பல்வேறு திட்டங்களில் தங்களின் முதலீட்டை செலுத்த துவங்கியுள்ளனர். பெரும்பாலும் அதிக வருவாய் தரும் முதலீட்டுத் திட்டங்களை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது. மேலும் குறைவான முதலீட்டை கொண்ட திட்டங்களையும் வழங்குகிறது. இதன் மூலம் வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி கிடைப்பதால், மக்கள் அதிகளவில் முதலீடுகளை செய்கின்றனர். அதிக இடங்களில் தபால் நிலையங்கள் இல்லாதலால் பிரான்சைஸ் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.அத்துடன் இரண்டு விதமான பிரான்சைஸ் திட்டத்தை வழங்கிவருகிறது.
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அவைகளுள் ஒன்று தபால் நிலைய பிரான்சைஸ் மற்றொன்று தபால்நிலைய முகவர்கள் பிரான்சைஸ் ஆகும். போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் தொடங்குவதற்கு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பியவராகவும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்த பிரான்சைஸ் திட்டத்தில் இணைந்திட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்கான சம்பளத்தொகையாக ஸ்பீட் போஸ்ட்டுக்கு ரூ.5 வழங்கப்படும். மேலும் ரூ. 100 முதல் ரூ. 200 வரையில் மணி ஆர்டருக்கு ரூ. 3.50 ரூபாயும் ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டருக்கு 5 ரூபாய் வழங்கப்படும்.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது..!!
அத்துடன் போஸ்டல் ஸ்டேம்ப், அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் ஆகியவற்றின் விற்பனைத் தொகையில் 5% தொகை கமிஷனாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து வருவாய் முத்திரைகள் மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகள் போன்றவற்றின் விற்பனை உள்ளிட்ட சில்லறைச் சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40% தொகை கமிஷனாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தபால் நிலையத்தில் இருந்து நேரடியாக பெறலாம் அல்லது இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவரால் தங்கள் பிரான்சைஸை உறுதி செய்யப்படும்.