தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம் – அமைச்சர் தொடக்கி வைப்பு!

0
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம் - அமைச்சர் தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம் - அமைச்சர் தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொன் தாலி திட்டம் – அமைச்சர் தொடக்கி வைப்பு!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி இத்திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

பொன் தாலி திட்டம்:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கலையடுத்து நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலைய துறை சார்பாக அமைச்சர் சேகர்பாபு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்றாக மாற்றுத்திறனாளிகளுக்கு பொன் தாலி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலிப்பணியிடங்கள் – 35,000 வரை சம்பளம்.. விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதன்படி இந்தத் திட்டத்தை இன்று அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை கோயம்பேடு அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில் மண்டபத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு 4 கிராம் பொன் தாலியை அமைச்சர் வழங்கினார். அத்துடன் திருமணத்திற்கான சீர்வரிசை பொருள்களும் வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு திருக்கோயிலில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டு பொன் தாலி திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!