கேரளாவில் சுற்றுலா பல்கலைக்கழகம் அமைக்க திட்டம் – மத்திய அரசிடம் அனுமதி கேட்டு மனு!
கேரளா மாநிலத்தில் சுற்றுலா பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி தரும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பல்கலைக்கழகம்:
நாட்டில் சுற்றுலா துறை நல்ல வளர்ச்சியை எட்டி வரும் நிலையில் கேரளா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பெற வேண்டும் என்கிற நோக்கில் மாநிலத்தில் சுற்றுலாப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக, மாநிலத்தில் சுற்றுலாப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய இருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மொஹமட் ரியாஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.1,000 உரிமைத்தொகைக்கு 7 லட்சம் பேர் மேல்முறையீடு – அரசு தரப்பு தகவல்!
மேலும், இந்த சுற்றுலா துறையின் மூலமாக முறையான திறன்கள் மற்றும் பயிற்சியுடன் கூடிய இளைஞர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, மாநிலத்தில் KITTS ஐ அடிப்படையாகக் கொண்டு சுற்றுலா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் எனவும், உணவு கைவினை மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்களை இதன் மூலமாகவே ஒருங்கிணைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் சுற்றுலா பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி தரும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.