ரூ.1,000 உரிமைத்தொகைக்கு 7 லட்சம் பேர் மேல்முறையீடு – அரசு தரப்பு தகவல்!
தமிழகத்தில் ரூபாய் 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கான மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மேல்முறையீடு:
தமிழகத்தில் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 58 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் தகுந்த காரணங்கள் உள்ளவர்கள் மீண்டும் மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அருகில் உள்ள அரசு இ – சேவை மையங்கள் அல்லது கோட்டாட்சியர் அலுவலகம் மூலமாக தங்கள் விண்ணப்பங்களை மீண்டும் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய்.. பள்ளிகளுக்கு விடுமுறையா? அச்சத்தில் பொதுமக்கள்!
தற்போது வரை ஏழு லட்சம் பேர் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் இதற்கான கால அவகாசம் உள்ளதால் மேலும் விண்ணப்பங்கள் பெறப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல்முறையீடுக்கு விண்ணப்பித்தவர்களின் தகவல்கள் கள ஆய்வு மூலம் சோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும் என்று அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.