தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்து வரும் ஓரிரு நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. மேலும் ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அக்டோபர் 6 மற்றும் 7 ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ரூ.1,000 உரிமைத்தொகைக்கு 7 லட்சம் பேர் மேல்முறையீடு – அரசு தரப்பு தகவல்!
அதேபோல் அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வானம் அடுத்து ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளின் குமரிக்கடல், தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணி 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.