மதுரையில் டைடல் பார்க் அமைக்க திட்டம் – 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு! அரசு தீவிரம்!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே கூடிய விரைவில் டைடல் பார்க் அமைக்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
டைடல் பார்க்:
தமிழகத்தில் மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் அதற்கான பணிகள் எப்போது துவங்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இதில் முதல் கட்டமாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடிய விரைவில் கட்டுமான பணி துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு எல்காட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மதுரைக்கு வர இருக்கின்றனர்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சட்ட நூல்கள் பிரிவு – புதிய அமைப்பு தொடக்கம்!
இவ்வாறு, மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமையவிருக்கும் புதிய டைடல் பார்க் வேலைப்பாடுகள் முடிவடைந்த பிறகு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அரசு இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்து செல்லும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.