மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் சட்ட நூல்கள் பிரிவு – புதிய அமைப்பு தொடக்கம்!
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புதிதாக முழுவதும் சட்ட நூல்கள் அடங்கிய நூலக பிரிவு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம்:
தமிழகத்தில் சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் பிரம்மாண்ட நூலகமாக இருந்து வந்தது. தற்போது இதனை விட பல மடங்கு பிரம்மாண்டமாக மதுரையில் உலக தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கடந்த ஜூலை 15ஆம் தேதி அன்று திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த நூலகத்தினை திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் பல கோடி மதிப்பிலான அனைத்து முக்கிய தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்கள் வயது மற்றும் முக்கிய பிரிவுகள் வாரியாக இடம்பெற்றுள்ளது.
தமிழக அரசின் “எண்ணும் எழுத்தும்” திட்டம் – ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு செயலர் கருத்து!
தற்போது கலைஞர் நூலகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர உள்ளது. அதன்படி முழுவதுமாக சட்ட நூல்கள் அடங்கிய உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நூலக பிரிவு அமைப்பு இங்கு தொடங்க உள்ளது. பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் விதிக்கும் அபராத தொகையானது நூலகத்தின் தனி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த தொகையினை கொண்டு இந்த புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.