பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போராட்டம் – வேலை நிறுத்த அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்:
பொது சேவை துறைகளில் பணியாற்றும் சாதாரண மக்கள் மீது வன்முறைகள் மற்றும் மோதல்கள் நடக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை வாகன ஓட்டிகள் தாக்கியது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இதனையடுத்து கேரளாவில் டிசம்பர் 31ஆம் தேதி (நாளை) இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 6:00 மணி வரை அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது என்று கேரள பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.