பெட்ரோல், டீசல் விலை – 35 நாட்களுக்கு பிறகு சரிவு! 5 மாநில தேர்தல் காரணமா?
இந்தியாவில் 35 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை 20 பைசா குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் இதற்கு காரணமாக இருக்கலாம் என சிலர் விமர்சித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் நடமாட்டம், வாகன போக்குவரத்து குறைந்தது. எனவே பெட்ரோல், டீசல் விற்பனையும் சரிந்தது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத அளவு குறைந்தது. இருப்பினும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – திங்கள் முதல் தளர்வுகள் அமல்!
கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்த்தப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது. டீசல் விலையும் உச்சத்தை தொட்டது. இதற்கிடையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பெட்ரோல் விலையில் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் மாநில வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பெட்ரோல் விலை இரண்டு இலக்கமாக மாறியது. மறுபுறம் ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
தமிழக அரசு பேருந்து டிக்கெட் கட்டணங்கள் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
இன்று கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு பின்னர் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது லிட்டருக்கு 20 பைசா குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.99.32-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் டீசல் ஒரு லிட்டர் ரூ.93.66 ஆக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கு 5 மாநிங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
பிராடு பசங்க .. ஏண்டா பிச்சை யா போடரிங்க ..20 பைசா .. செருப்பு லே அடிப்போம் ..