தமிழகத்தில் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – திங்கள் முதல் தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கானது தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் திங்கள் (ஆகஸ்ட் 23) முதல் அமலுக்கு வருகிறது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் 3வது அலை அச்சம் நிலவுவதால் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இந்நிலையில் ஆகஸ்ட் 23ம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு அதாவது செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – நேர மாற்றம்!
இதில் பலவித தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் 50 சதவீத திறன் கொண்ட பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இருப்பினும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து, செப்டம்பர் 15 க்கு பிறகு விவாதங்கள் தொடங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, டிப்ளமோ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் செப்டம்பர் 1 முதல் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படும்.
கண்ணன், ஐஸ்வர்யா தங்க ஏற்படும் செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த ட்விஸ்ட்!
ஏற்கனவே மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரிகளும் ஆகஸ்ட் 16 முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. திங்கள்கிழமை முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதிக்கப்படும். கடற்கரை கரையோரங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி. அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள விற்பனையாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தமிழக அரசு பேருந்து டிக்கெட் கட்டணங்கள் உயர்வு? அமைச்சர் விளக்கம்!
கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் மற்றும் ஐடி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதற்கிடையில், கடுமையான விதிகளை தொடர்ந்து, ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் பொதுப் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் தொடர்ந்து மூடப்படும். இருப்பினும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் அரசு பொதுமக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.