கண்ணன், ஐஸ்வர்யா தங்க ஏற்படும் செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த கதைக்களமாக கண்ணன், ஐஸ்வர்யாவை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை ஜனார்த்தனன் செய்ய தொடங்குகிறார். இதனால் மீனா மகிழ்ச்சி அடைந்து அதை முல்லையிடம் தெரிவிக்கிறார்.
அடுத்த எபிசோட்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணன், ஐஸ்வர்யா திருமணத்திற்கு பின்னர் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வார TRP ரேட்டிங்கில் கூட டாப் 3 இடத்திற்குள் சென்று அசத்தியது. அதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். ரசிகர்களோ சீரியலில் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். தங்க இடம் இல்லாமல் ரோட்டில் நிற்கும் கண்ணன், ஐஸ்வர்யாவை தனது அப்பா வீட்டில் தங்க வைக்க முல்லை ஏற்பாடு செய்கிறார். அங்கு சந்தோசமாக இருக்கும் இருவரும் நெருக்கமடைகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – நேர மாற்றம்!
இந்த நிலையில் மல்லிக்கு விஷயம் தெரிய வர அவர்களை அங்கிருந்தும் விரட்டுகிறார். இந்த விஷயத்தை முல்லையின் அப்பா கதிர், ஜீவாவிடம் தெரிவிக்கிறார். மறுபுறம் மூர்த்திக்கு தலை சுற்றல் ஏற்படுகிறது. கண்ணனின் அம்மாவோ அவனை நினைத்து சாப்பிடாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். கண்ணன், ஐஸ்வர்யாவோ மீண்டும் நடுரோட்டிற்கு வருகின்றனர். அவர்களை தங்க வைக்க ரூம் ஏற்பாடு செய்து தர நண்பர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அங்கு வரும் மீனாவின் அப்பா தன்னுடன் வருமாறு இருவரையும் அழைத்து செல்கிறார்.
மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி, லட்சுமி & ஹேமாவின் நிலைமை? அடுத்த எபிசோட்!
இருவரும் தங்குவதற்கு ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கிறார். கண்ணனை தனியாக அழைத்துச் சென்று அறிவுரைகளை கூறி, மீனா தான் இதையெல்லாம் செய்ய சொல்லியதாக கூறுகிறார். அடுத்து வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்குமாறு கூறுகிறார். இதனால் கண்ணன், ஐஸ்வர்யா மேற்படிப்பை முடிக்க போகிறார்களா அல்லது வேலைக்கு போக போகிறார்களா? என்பதை வரப்போகும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.