சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – நேர மாற்றம்!
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நேரக் கட்டுப்பாடு மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
மெட்ரோ சேவை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காலத்தில் அரசின் அத்தியாவசிய துறை பணியாளர்கள் பயணிக்கவும், முன்களப் பணியாளர்கள் பயணிக்கவும் மட்டும் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காலை மற்றும் மாலையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டது.
மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி, லட்சுமி & ஹேமாவின் நிலைமை? அடுத்த எபிசோட்!
அதன்பின்னர், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அனைவரும் பயணிக்க தொடங்கும் காலத்தில் நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு முறைகளுடன் மெட்ரோ ரயிகள் இயக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவைக்கான நேரம் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் நாளை முதல் காலை 5:30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலுல் ரயில்கள் இயக்கப்படும். ஞாயிறு கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ரயிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அனைவரும் அரசின் அனைத்து நோய் தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.