சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் இன்று நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!

0
சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் இன்று நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!
சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் இன்று நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்!
சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் இன்று நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான ஏற்காட்டில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.

நில அதிர்வு:

சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. இங்கே இருக்கும் குளிர்ச்சியான சூழ்நிலையை ரசிக்க, தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் இந்த பகுதியில் ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் இன்று ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆய்வு கூட்டம் – பிப். 1 & 2ல் ஏற்பாடு!!

இது குறித்து பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் இந்த நில அதிர்வால் வீடுகளில் உள்ள டிவி, மின்விசிறி போன்றவை அதிர்ந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கிறது. மேலும் இது பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய நில அதிர்வு அதிகாரி கூறிய போது, இந்த நில அதிர்வு அதிகமாக இல்லை எனவும், அதனால் சீஸ்மோகிராபில் குறியீடுகள் காட்டவில்லை என தெரிவித்தார்

ஆனாலும் ஏற்காடு பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், வீடுகள் போன்றவற்றில் அதிக சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் ஏற்காடு பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!