தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆய்வு கூட்டம் – பிப். 1 & 2ல் ஏற்பாடு!!

0
தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆய்வு கூட்டம் - பிப். 1 & 2ல் ஏற்பாடு!!
தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆய்வு கூட்டம் - பிப். 1 & 2ல் ஏற்பாடு!!
தமிழகத்தில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆய்வு கூட்டம் – பிப். 1 & 2ல் ஏற்பாடு!!

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் ஏகப்பட்ட நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் வருகிற பிப். 1 மற்றும் 2 தேதிகளில் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு கூட்டம்:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. மேலும் திமுக கட்சி சார்பில் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 70 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்ற ஏகப்பட்ட நலத்திட்டங்களை அரசு செய்து வருகிறது. அந்த நலத்திட்டங்கள் மக்களிடம் சரியான முறையில் சென்று அடைகிறதா என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்படும்.

இந்தியாவில் பிப். 1 மத்திய பட்ஜெட்: பிரத்யேக “Budget Mobile App” அறிமுகம்! முழு விவரத்தை அறியலாம்!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பிப்.1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசு திட்டங்கள் குறித்தும், நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் உள்ள முன்னேற்றம் குறித்தும், மேலும் அமல்படுத்தாமல் இருக்கும் திட்டங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதில் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் கலந்து கொள்ள இருக்கிறார். தற்போது திமுக ஆட்சியில் மகளிருக்கான இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை என பல திட்டங்கள் மூலமாக மக்களும் பெண்களும் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!