தமிழகத்தில் 2023 பொங்கல் பண்டிகை – இலவச வேட்டி, சேலை வழங்காதது ஏன்?
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்காதது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு முன்னாள் தமிழக முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலவச வேட்டி, சேலை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக ரொக்க பணம், பரிசுத் தொகுப்பு, வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்க பணம் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கியது.
சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் இன்று நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் இலவச வேட்டி, சேலை வழங்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். 2022 – 2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் ஏன் அதனை மக்களுக்கு வழங்கவில்லை என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இலவச வேட்டி சேலை வழங்காத நிலையில் ஏழை எளிய மக்கள் பொங்கல் தினத்தன்று புத்தாடை அணிந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அதனால் இனி பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்னதாகவே வேட்டி சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.