விதவை பெண்களுக்கான பென்ஷன் திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!
கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் விதவை பெண்களுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது. மேலும், யார் யாரெல்லாம் இந்த ஓய்வூதிய தொகையை வாங்கலாம் என்பதற்குரிய முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பென்ஷன் திட்டம்:
மத்திய அரசு இந்தியாவில் உள்ள பெண்களின் வசதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுக்கிறது. அந்த வகையில் விதவைப் பெண்களுக்கு உதவும் வகையில் வித்வா பென்சன் யோஜனா என்கிற திட்டமும் மத்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநிலத்திற்கு மாநிலம் இந்த ஓய்வூதியத் தொகை மாறுபடுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், 18 வயது முதல் 60 வயது வரை கணவரை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படும் அனைத்து விதவை பெண்களுக்கும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் பெற சில தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் பெற முடியும் எனவும், இது வரை வேறு எந்த ஓய்வூதியத்தையும் வாங்காதவராக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
மேலும், விதவை பெண் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைக்கும் விதவைகள் ஆதார் அட்டை, கணவரின் இறப்புச் சான்றிதழ், மொபைல் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், வயதுச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் விதவை பெண்களுக்கு ரூ.2,250 ஓய்வூதியமும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.300 ம், மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.900ம், டெல்லியில் ரூ.2,500ம், ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.750ம், உத்தராகண்டில் ரூ.1,200ம், குஜராத்தில் ரூ.1,250 ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக உள்ள விதவை பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.