பள்ளிகள் முழுவதும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை இயங்க உத்தரவு – வெப்ப அலை எதிரொலி!
நகரத்தில் அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கான நேரத்தை மாற்றுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பள்ளி நேர மாற்றம்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கான நேர மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் பாட்னா நகரத்தில் 41.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் வெப்பநிலை கணிசமாக உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
2 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணிவாய்ப்பு – முதல்வரின் அறிவிப்பு!
அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக மாணவர்கள் தங்களின் பிற்பகல் வெயில் தொடங்குவதற்கு முன்பாக வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றடையலாம்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 3ம் தேதி அன்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை என பள்ளிகளுக்கான நேரம் மாற்றப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download