‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்குள் கண்ணனை சேர்த்துக் கொள்ளும் மூர்த்தி? ரசிகர்கள் ஷாக்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல கட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இதில் தற்போது அடுத்து நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் டிவியில் கூட்டு குடும்ப கதையினை மிகவும் அழகாக எடுத்து காட்டி வருகிறது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இந்த சீரியலின் கதைக்களத்திற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், தற்போது இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு எதிரில் புதிதாக குடி வந்து இருக்கின்றனர். இதனால் பழையபடி சீரியல் சூடு பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
பாக்கியலட்சுமி’ சீரியல் இனியாவிற்கு திடீர் திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் பல விதங்களிலும் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக தனத்திற்கு பிரசவ வலி வருவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. தனத்திற்கு பிரசவ வலி ஏற்படும் போது வீட்டில் யாருமே இருக்க மாட்டார்களாம். இதனால் தனத்தின் அம்மா வேறு வழியில்லாமல் கண்ணனை தான் உதவிக்கு அழைத்து ஹாஸ்பிடல் கூட்டி செல்லுவாராம்.
பணம் இல்லாமல் தவிக்கும் கோபி, முன்வந்து உதவி செய்யும் பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தனத்திற்கு இந்த நேரத்தில் உதவ இருப்பதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவர் மீதும் கோபம் குறைந்து, அவர்களை மீண்டும் குடும்பத்தில் சேர்த்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. வீட்டினர் அனைவருக்குமே கண்ணன் மீது இருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உள்ளது. மூர்த்தி மட்டும் தான் அவரை மன்னிக்க மனமில்லாமல் இருப்பது போல இருக்கிறார். இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சேருவர்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.