தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா, மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற இருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழா நடைபெற இருக்கிறது. அதற்கு முல்லையின் அம்மா அப்பா மற்றும் மீனாவின் அம்மா அப்பா வருகின்றனர். அப்போது தொட்டில் இன்னும் காட்டவில்லையா என கேட்க, பழைய தொட்டிலில் தான் படுக்க வேண்டும் என சொன்னார்கள் என மீனாவின் அப்பா சொல்ல, ஆமாம் அதில் தான் படுக்க வைக்க போறாங்க என மீனா சொல்கிறார்.
அனைவரும் அமர்ந்து சந்தோசமாக பேசிக் கொண்டிருக்க, ஜெகா புதிதாக தொட்டில் ஒன்றை வாங்கி வருகிறார். அதை பார்த்ததும் மீனாவின் அம்மா அப்பா அதிர்ச்சி அடைகின்றனர். தனமும் அதை பார்த்து வருத்தப்பட, தனம் ஜெகாவை தனியாக அழைத்து பேசுகிறார். இங்கே தொட்டில் இருக்கிறது எதற்கு புதிதாக வாங்கி வந்தீர்கள் என கேட்க, புதிதாக வாங்குனீங்களா என கேட்கிறார். உடனே தனத்தின் அம்மா பரம்பரை தொட்டில் இருக்கிறது 50 வருடம் பழசு என சொல்கிறார்கள்.
அதெல்லாம் வேண்டாம் என கஸ்தூரி சொல்ல, தனத்திற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. பின் தனத்தின் குழந்தையை தொட்டிலில் போட சொல்ல, மீனாவை போட சொல்கிறார். ஆனால் தனம் பெரியவர்களை அழைத்து தொட்டிலில் போட சொல்கிறார்கள். மறுபக்கம் கண்ணன் வீட்டு வாசலில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.மீனாவின் அப்பாவிற்கு நடப்பது எல்லாம் புடிக்காமல் இருக்கிறது. பெயர் வைக்க தொடங்க இன்னும் நேரம் இருக்கிறது என சொல்கின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா – அடுத்த ட்விஸ்டு!
தனத்தின் அம்மா முல்லையை அடுத்து நீ தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். முல்லையின் அம்மாவும் எல்லாரும் கேட்கிறார்கள் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சொல்கிறார். பின் முல்லை வெக்கத்தில் இருக்கின்றனர். பின் என்ன பெயர் வைக்கலாம் என சொல்ல மாமா பெயர் தான் வைக்க வேண்டும் என சொல்கின்றனர். கஸ்தூரி மாடல் பெயர்களை சொல்ல, மீனாவின் அப்பா மீனாவை முறைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.