கருக்கலைப்பு செய்ததால் கைது செய்யப்பட்ட வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கருக்கலைப்பு செய்ததால் கைது செய்யப்பட்ட வெண்பா, அதிர்ச்சியில் பாரதி - இன்றைய
கருக்கலைப்பு செய்ததால் கைது செய்யப்பட்ட வெண்பா, அதிர்ச்சியில் பாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கருக்கலைப்பு செய்ததால் கைது செய்யப்பட்ட வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு செய்ததால் கண்ணம்மா புகார் அளித்து அவரை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார். பாரதி அதை செய்தியில் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கண்ணம்மாவிற்கு தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்க கண்ணம்மா கோபப்படுகிறார். உடனே கண்ணம்மா போனை எடுக்க உன்னுடைய குழந்தையை நாளைக்கு கொல்ல போகிறேன் என சொல்கிறார். என் குழந்தை எப்படி இருப்பாள் என உனக்கு தெரியுமா, என கண்ணம்மா கேட்க, வெண்பா அதெல்லாம் உனக்கு எதற்கு என கேட்கிறார். பின் வெண்பா என்ன உன் குழந்தை பற்றி சொன்னால் பயமே இல்லாமல் இருக்கிறாய் அவ்வளவு தைரியம் வந்துவிட்டதா என மிரட்டுகிறார்.

பின் கண்ணம்மா வீடியோ கால் வருகிறேன் என் குழந்தையை காட்டு என சொல்ல, வெண்பா போனை எடுக்கவில்லை. அவள் இப்போது இங்கே இல்லை என சொல்ல, என் குழந்தை என்னிடம் இல்லை என சொல்கிறார். பின் பாரதி வர சௌந்தர்யாவிடம் வேணு விவாகரத்து பற்றி எதுவும் தெரிய வேண்டாம் என சொல்கிறார். சௌந்தர்யா கண்டுகொள்ளாதது போல இருக்க, பாரதி ஏன் இப்படி சமையல் அம்மாவிற்கு மேல் நடிக்கிறீங்க.

மாவட்டத்தில் நவ.9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – நவ.27 பணி நாளாக கலெக்டர் அறிவிப்பு!

உங்க இருவருக்கும் அந்த கண்ணம்மா பற்றிய நினைப்பு மட்டும் தான் வேற எதுவும் இல்லை என சொல்கிறார். பின் வெண்பா மருத்துவமனையில் கண்ணம்மாவிற்கு என்னிடம் குழந்தை இல்லை என யார் சொல்லுப்பா என யோசனையில் இருக்கிறார். அப்போது வெண்பாவை பார்க்க வேண்டும் என இருவர் வந்திருக்கின்றனர். அவர்கள் பெண் குழந்தை என்பதால் என்னுடைய கணவர் ரொம்ப அடிக்கிறார். அதனால் கரு கலைப்பு செய்ய வேண்டும் என சொல்ல, முதலில் வெண்பா முடியாது என சொல்கிறார்.

அவர்கள் வெண்பாவை வற்புறுத்தி கேட்க, வெண்பா பணத்தை வாங்கி கொண்டு ஒப்புக் கொள்கிறார். பின் போலீசை அழைத்து வெண்பாவை கைது செய்ய சொல்கின்றனர் . வெண்பா கைது செய்து அழைத்து செல்ல வெளியே கண்ணம்மா நிற்கிறார். இதெல்லாம் கண்ணம்மாவின் திட்டம் என தெரிந்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். பின் அவரை அழைத்து ஜீப்பில் ஏற்ற, மறுபக்கம் பாரதி சௌந்தர்யாவிடம் எதையோ மறைப்பது போல உங்களது முகம் இருக்கிறது என கேட்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலியை கொலை செய்ய முயற்சிக்கும் வெண்பா – அடுத்த ட்விஸ்டு!

ஆமாம் நீ எதோ செய்வது தெரிகிறது. ஆனால் என்ன என எனக்கு தெரியவில்லை என வேணு சொல்ல, அஞ்சலி வருகிறார். இப்படியே வீட்டுக் உள்ளையே இருக்காதே வெளியே எங்கேயாவது சென்று வா என வேணு சொல்ல, அகில் வேகமாக லேப்டாப் உடன் வருகிறார். அனைவரையும் அமர வைத்து லேப்டாப்பில் வெண்பா கைது செய்யப்பட்ட செய்தியை காட்டுகிறார். இனிமேல் வெண்பா மருத்துவராக வேலை செய்ய முடியாது என செய்தியில் சொல்கிறார். அதை பார்த்து பாரதி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!